in

ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன், கருத்து கணிப்பு பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக


Watch – YouTube Click

ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன், கருத்து கணிப்பு பெயரில் மக்களை ஏமாற்றும் வேளையில், குறுக்கு வழியில் திமுக இறங்கிவிட்டது என டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் திலகர் திடலில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அதன் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டிடிவி.தினகரன் திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இதுவரை ஒன்று கூட செய்யவில்லை என குற்றம் சாட்டி திமுக தலைவர் ஸ்டாலினை போல் மிமிக்ரி செய்து கிண்டல் செய்தார். மேலும் அவர் பேசுகையில், இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை, ஆனால் அதற்குள் சர்வே எடுத்து 37 – 39 தொகுதியில் வெற்றி பெறுவோம் என கூறுகின்றனர்.

ஆனால் ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15,000 பேரிடம் சர்வே எடுத்தது மூலம் திமுகவுக்கு ஆதரவாக வந்து சர்வே பொய் என உறுதி செய்துள்ளனர். தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் எப்படி மக்களை ஏமாற்றினார்களோ, சர்வே என்ற பெயரில் திமுகவின் பின்னணியில் முயற்சி நடந்து வருகிறது. திமுக கூட்டணியும் அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணியும் சிதறிவிட்டது. அமுமுக சுயம்பாக்க தோன்றியது, இயற்கையாக தோன்றியது எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஆண்ட கட்சிக்கும் – ஆளுகிற கட்சிக்கும் மாற்று சக்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் என மக்கள் நம்புகின்றனர் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்

மலர் மற்றும் காய்கனி கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்