in

பெண் சர்வேரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

பெண் சர்வேரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

 

பெண் சர்வேயரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெரிய கோட்டை பகுதியைச் சேர்ந்த சர்வேயர் பவ்யா மீது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தகாத வார்த்தைகளால் கூறி சர்வேரை தாக்கி உள்ளார்.

அவர் மீது காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வேயரை தாக்குதல் நடத்தியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி சர்வேயர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட தலைவர் வினோத் பாலு தலைமை வகித்தார். துணைத்தலைவர் காஞ்சி தலைவன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி சிறப்புரையாற்றினார்.


Watch – YouTube Click

What do you think?

எல்லோருக்கும் எல்லாம் என்ற திமுகவின் பொதுக்கூட்டம்

இலங்கையில் நல்லடக்கம் செய்யப்பட்ட சாந்தனின் உடல்