அமைச்சர் நிகழ்ச்சியில் தவெக மாவட்ட செயலாளருக்கு கோட்டாட்சியருக்கு பக்கத்தில் இருக்கை
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேரிடர் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசு விதியை மீறி அரசியல் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கு நாகை கோட்டாட்சியர் சங்கரநாராயணனுக்கு பக்கத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நிலையில், கீழே அமர்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தவெக மாவட்ட செயலாளருக்கு இருக்கை அமைப்பு
இதே போல வேதாரணியம் தாவிகா வேட்பாளராக போட்டியிட்ட கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்ட தாவகா நிர்வாகிகளும் மாவட்ட அதிகாரிகளுடன் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மாநாட்டு அரங்கின் பிரதான கதவை தள்ளிக்கொண்டு தவெக துண்டுகளுடன் கட்சி தொண்டர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற வந்த பயனாளிகள் முகம் சுழித்தனர்.

