நகை, சொத்து அபகரித்ததாக மகன் மீது முதிய தாய் புகார்
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் பெருமாள் மற்றும் விருமாயி, இவர்களுக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்
இவர்களுக்கு சொந்தமான சுமார் பத்து ஏக்கர் நிலத்திற்கு வங்கியில் பணம் பெற்று தருவதாக கூறி இவர்களது கடைசி மகன் முருகன் என்பவர் தன் பெயரில் தான செட்டில்மென்ட் செய்து சொத்தை மாற்றிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது
இதனால் முதியவர் பெருமாள் உடல்நல பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதத்திற்கு முன்பு உயிரிழந்து விட்டார்
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தன்னை கவனித்து கொள்வதாக கூறி தனது நகைகளை அபகரித்துக் கொண்டதாக மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தன்னைக் கவனித்துக் கொள்வதாக கூறி தனது நகை மற்றும் சொத்துக்களை ஏமாற்றிய தனது மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனது முதல் மகன் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மூதாட்டி புகார் தெரிவித்தார்


