in

காரில் பெட்டி பெட்டியாக இருந்த புது துணியால் பரபரப்பு


Watch – YouTube Click

காரில் பெட்டி பெட்டியாக இருந்த புது துணியால் பரபரப்பு

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சமத்துவபுரம் அருகே சித்தூர் – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது உடனே அவற்றை மடக்கி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தினுள் இருந்த பெட்டி பெட்டியான புது துணிகளால் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காரை முழுவதுமாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் அவற்றினுள் இருந்து சுமார் 20,000 ஆயிரம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை தீவிரமாக சோதனை செய்தனர் மேலும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்தனர்.

உடனடியாக காரில் பயணித்த வாலிபர்கள் நாங்கள் புதுத் துணியை துணிக்கடைகளுக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம் என தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவித்தார்.

இருந்த போதிலும் சோதனைக்கு பின் குஜராத் வாலிபர்கள் புது துணிகளை கொண்டு செல்லும் ஆவணங்களை குஜராத்தில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பில்களை காண்பித்த பிறகு அவற்றை சோதனை செய்த அதிகாரிகள் காரில் இருந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

52-க்கு மேற்பட்ட சமூக நல அமைப்பினருடன் சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆலோசனை

ஹாலோ பிளாக் ஃபேக்டரி மற்றும் நிலத்தை அபகரிக்க திமுக பிரமுகர் மணிகண்டன் மிரட்டல்