in

கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவிகள்


Watch – YouTube Click

கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவிகள்.

திருவண்ணாமலை நகராட்சி யின் சார்பாக ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியும் பெண்களுக்கென்று தனியாக ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது.

இதில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெண் பிள்ளைகளை இந்த பள்ளியில் தான் அதிகம் பெற்றோர்கள் படிக்க வைக்கின்றனர் இந்தப் பள்ளியில் மட்டும் 1500 மாணவர்களுக்கு மேலாக ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் இந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதமும் ஒவ்வொரு வருடமும் 90 சதவீதத்திற்கும் மேல் இருப்பதால் இந்த பள்ளியில் அதிக அளவு மாணவிகள் பயின்று வருகின்றனர் .

இந்த வருடம் கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை சக ஆசிரியைகள் பூரண கும்ப மரியாதையுடன் மாணவிகளை அன்புடன் உற்சாகமாக வரவேற்றார்கள்.

இந்த வருடமும் நன்றாக படித்து 100% தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி வகுப்பறைக்கு அனுப்பினார்கள்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகங்களை மாணவிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்

தொண்டு நிறுவனத்திற்கு கோடி ரூபாய் கொடுத்த மகேஷ் babu..வின் மகள் சித்தரா