in

காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்த போலீசார்


Watch – YouTube Click

புதுச்சேரி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்த போலீசார்

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்த போலீசாருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்

புதுச்சேரியில் கடந்த 10 தினங்களாக 100 டிகிரிக்கு மேல் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது,இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியே வர அச்சப்பட்டு வருகின்றனர்.

மேலும் வெளியில் வரும் பொதுமக்கள் வெயிலில் தாகத்தை தணித்துக் கொள்ள நீர்மோர், தர்பூசணி, ஜுஸ்,இளநீர் உள்ளிட்டைகளை அருந்தி வெயிலில் இருந்து தங்களை காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி திருக்கனூர் போலீசார் சார்பில் காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தலை ஆய்வாளர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரி, உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் மேலும் வீதியில் நடந்து சென்றவர்களுக்கும் போலீசார் நடந்தே சென்று மோர் வழங்கினர்.

பொதுமக்களும் ஆர்வமுடன் வங்கி மோரை அருந்தி சென்றனர் சென்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு வழங்கும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபிக்க வகையில் காவல் நிலையத்தில் போலீசார் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு வழங்கியது அனைவரது மத்தியிலும் பாராட்டை குவித்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

மெட்ரோ கட்டணம் அதிரடி உயர்வு

திமுக சார்பாக தொகுதி செயலாளர் வடிவேல் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்