in

 வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் மூன்றாவது முறையாக பழுது


Watch – YouTube Click

 வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் மூன்றாவது முறையாக பழுது

 

புதுச்சேரி சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் மூன்றாவது முறையாக பழுது.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வாக்குப்பதிவு மையம் வைக்கப்பட்டுள்ளது காலை நான்கு முப்பது மணி அளவில் மின்னணு இயந்திரம் வேலை செய்யாத காரணமாக வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டது…

அதனை தொடர்ந்து எட்டு முப்பது மணிக்கு மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகி உள்ளது அதனையும் அதிகாரிகள் செய்து சரி செய்த நிலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது…

அதனைத் தொடர்ந்து இரண்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளனர்…மீண்டும் மின்னணு இயந்திரம் பழுதாகி உள்ளது…

இதனால் அங்கு இருக்கும் கட்சியின் ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மின்னணு இயந்திரம் ஏன் பழுதாகின்றது என அதிகாரியிடம் கேட்டபோது சரியான முறையில் பதில் அளிக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வருகிறது….

அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது…


Watch – YouTube Click

What do you think?

மக்களவைத் தேர்தல் 2024 – திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி