in

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி


Watch – YouTube Click

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி

 

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி,தனது வாக்கை பதிவு செய்த பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்குப்பதி தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு சில வாக்கு சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் இவையெல்லாம் சரி செய்யப்பட்டு தற்போது அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மனவெளி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம்…

காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கிறார்கள் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது மேலும் என்னை ஆதரித்து ஜே. பி நட்டா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர் அவர்கள் பிரச்சாரமும் எனக்கு வலு சேர்த்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் டெபாசிட் இழப்பார் என்பதும் உறுதி என்று அவர் குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

 வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் மூன்றாவது முறையாக பழுது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் குடும்பத்துடன் வாக்கு பதிவு