in

தரங்கம்பாடி துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- கணக்கில் வராத ரூ.49,445 பறிமுதல்:-

தரங்கம்பாடி துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- கணக்கில் வராத ரூ.49,445 பறிமுதல்:-

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள தரங்கம்பாடி துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிலம் எடுப்பு மற்றும் மேல் முறையீடு தனி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் காவல் ஆய்வாளர் அருள் பிரியா தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சார் பதிவாளர் மகேஸ்வரி முன்னிலையில் நடந்த சோதனையில் ஊழியர்கள் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.49,445 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What do you think?

குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியும் பணி வழங்கவில்லை – மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் ஒப்பந்ததாரர் புகார்

இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்