in

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து


Watch – YouTube Click

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

 

புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதியில் தினந்தோறும் 500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் குருமாம்பேட்டில் உள்ள அரசின் 27 ஏக்கர் பரப்பில் அளவிலான இடத்தில் கொட்டப்பட்டு மலை போல் குவிக்கப்படுகிறது.

நேற்று மாலை இந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

அப்போது குப்பை கிடங்கு அருகே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக உள்ளாட்சித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி குப்பை கிடங்கை தீயிட்டு கொளுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது..


Watch – YouTube Click

What do you think?

எம்பி கதிர் ஆனந்த் பேச்சுக்கு பெண்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் நாதக வேட்பாளர் கார்த்திகா

கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆக மாறிய மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்