in

இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ….

கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை முதல் 7 நாட்களாக சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக 2000க்கும் மேற்பட்டோர் இடைநிலை ஆசிரியர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி 311ஐ திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக் கத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டு வருகின்ற இடைநிலை ஆசிரியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண்டித்து,

இன்று விடுதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் உள்ள தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கதிரேசன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தால் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்