in

எல் ஐ சி பணியாளரை தாக்கிய நடிகை ராதா மீது போலீசில் புகார்


Watch – YouTube Click

எல் ஐ சி பணியாளரை தாக்கிய நடிகை ராதா மீது போலீசில் புகார்

எல் ஐ சி பணியாளரை தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா மீது போலீசில் புகார் சுந்தரா ட்ராவல்ஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா.

சென்னை சாலிகிராமத்தில் தாய் மற்றும் மகன்னுடன் வசித்து வருகிறார்.

இவருக்கு எல்ஐசி ஏஜென்ட் முரளி கிருஷ்ணன் என்பவருடன் அறிமுகம் ஆனபோது இவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராதாவிடம் பிட்காயினில் பணம் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி இரண்டு வருடங்களுக்கு முன்பு முரளி கிருஷ்ணனின் நண்பரிடம் ரூபாய் 90 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை முதலீடு செய்த பணத்தையும் அதற்கான வட்டியையும் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வடபழனியில் உள்ள தனது நண்பரின் அலுவலகத்தில் முரளி கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தபோது நடிகை ராதா அவர் தாய் மகன் ஆகியோர் முதலீடு செய்த பணத்தை கேட்டனர்.

அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே கோபமான நடிகை ராதா முரளி கிருஷ்ணனை தாக்கி இருக்கிறார். இதில் தடுமாறி விழுந்த கிருஷ்ணனின் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முரளி கிருஷ்ணன் வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தனது வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு நபருடன் சாலையில் நடந்து செல்லும் பொழுது வாக்குவாதம் முற்றி அவரை தன் மகனுடன் சேர்ந்து தாக்கியதாக போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே நடிகையின் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

விருது விழாவில் டயானா.. கவர்ச்சி உடையை ஏன் நயன்தாரா அணிந்து வந்தார்..

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா