in

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


Watch – YouTube Click

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு .டவரில் ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகளால் பரபரப்பு

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் பனகல் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

மேலும் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டி தீருவேன் என கூறும் கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அருகே பனங்கல் சாலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் இரண்டு பேர் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்யும் பொழுது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அனைவரையும் இழுத்து வந்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி விவசாயிகளை கைது செய்துள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்