in

பணி நிரந்தரம் கோரி டவர் மீது ஏறிய பகுதி நேர ஆசிரியர்

பணி நிரந்தரம் கோரி டவர் மீது ஏறிய பகுதி நேர ஆசிரியர்

 

பணி நிரந்தரம் கோரி டவர் மீது ஏறிய பகுதி நேர ஆசிரியர்… அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த சேரன் பாண்டியன் (60), தந்தை சதாசிவம். இவர் வேப்பூர் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தனது பணியை நிரந்தரம் செய்யக்கோரி இன்று திடீரென உயர்மின் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பூர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஆசிரியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவரை பாதுகாப்பாக கீழே இறக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

34 கிலோ குட்காவுடன் அரசு பேருந்து நடத்துனர் கைது

கல் நகர் மற்றும் பாவாஜி நகர் பகுதியில் காவல் துறையினர் அதிரடி சோதனை……