in

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தேசிய சமூக நீதிக்கட்சி மனு


Watch – YouTube Click

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தேசிய சமூக நீதிக்கட்சி மனு

 

வண்ணார் சமுதாயத்தின் பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் வேண்டும்…புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தேசிய சமூக நீதிக்கட்சி மனு அளித்துள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமியை தேசிய சமூக நீதிக்கட்சி தலைவர் வெங்கடேஷ் குமார் இன்று சந்தித்து மனு ஒன்றினை அளித்தார். அதில் கடந்த 3 ஆண்டுகளாய்
அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பாக வண்ணார் சமுதாயத்தின் பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்தார்.மேலும் தற்போது தேசிய சமூக நீதிக்கட்சி சார்பாக இதே கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு முதல்வர் உடனடியாக பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேஷ் குமார்,பெயர் மாற்றத்திற்கும் 5% இட ஒதுக்கீட்டிற்கும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதியளித்ததாக கூறினார்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக உள்ள தனது தொகுதியில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதாகவும் தற்பொழுது வெயில் உச்சத்தில் இருப்பதால் கடும் வறச்சி ஏற்பட்டுவுள்ளதாகவும் அங்கு பிரதான தொழில் விவசாயம் எனவும் இந்த வறட்சியினால் விவசாயம் பாதிக்கபடுகிறது என்றும் அங்கு விளைவிக்க கூடிய பூக்கள், பழங்கள், காய்கறிகள், போன்ற முக்கிய பொருள்களை அரசாங்கமே உரிய விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.


Watch – YouTube Click

What do you think?

சந்தைக்கு வந்த மாடுகளின் தாகம் மற்றும் வெப்பத்தை தனித்த – ஆணையர் எழில்ராஜன்

பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக கூட்டணிக்கு சிக்கல்