in

உணவகத்தில் பரோட்டா தயாரித்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

உணவகத்தில் பரோட்டா தயாரித்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்

 

திண்டிவனம் அடுத்த கூட்டரிபட்டில உள்ள உணவகத்தில் பரோட்டா தயாரித்து கொடுத்து அமைச்சர் செஞ்சி. மஸ்தான் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆரணி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக தரணி வேந்தன் என்பவர் போட்டியிடுகின்றார். இவருக்கு சிறுபான்மை பிரிவு நலன் அமைச்ர் செஞ்சி.மஸ்தான் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக இன்று ஒளவையார்குப்பம், பெரியதச்சூர், மைலம், பாதிராப்புலியூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் செஞ்சி. மஸ்தான் வாக்கு சேகரித்தார் .

அப்பொழுது கூட்டேரிப்பட்டு பகுதியில் பொது மக்களிடம் பேசிய அவர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் வெளி நாட்டில் உள்ள கருப்பு பணத்தையெல்லாம் கொண்டு வந்து ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக சொல்லி பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 15 பைசா கூட போடவில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா தயாரித்துக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி.மஸ்தான பரோட்டாவை பிச்சி போடுவது போன்று மோடியையும், பாஜக கட்சியையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பிச்சி போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிகமாக சிரிப்பலை எழுந்தது.


Watch – YouTube Click

What do you think?

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் 50 ரூபாய் வழங்கிய வீடியோ வைரல்

யூ டர்ன் அடித்து மீண்டும் மயிலாடுதுறைக்கு திரும்பிய சிறுத்தை