in

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டி. அன்பழகன் பேச்சு


Watch – YouTube Click

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டி. அன்பழகன் பேச்சு

A to Z அரசியலில் அதிமுக தான். ஆளும் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் பி டீம் கிடையாது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

எங்களை குறை கூற, காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. அதிமுக-திமுகவை ஏமாற்றி 10 சீட் வாங்கி கொண்டு காங்கிரஸ் கட்சி ஜெயித்து வருகிறது-புதுச்சேரி காங் தலைவர் வைத்திலிங்கத்துக்கு அதிமுக பதிலடி-புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நிற்கும் என்றார்.

புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரி பாஜகவின் உண்மை கட்சியினர் யாரும் இல்லை. எல்லாம் வந்தேறிகள். அங்கு கொள்கை, கோட்டுபாடுகள் இல்லாத தொண்டர்கள் உள்ளனர்.புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நிற்கும்.

3 லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி பெற்று விடுவோம். அதிமுகவை கண்டு காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் பயப்படுகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. திமுகவினர் சிறுபான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுவிடும் என இருந்த அவர்களுக்கு தற்போது அதிமுக சிறுபான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுவிடும் என பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருகின்றனர்..

ஒரு கட்சியின் தலைவர் இறந்து விட்டால், சலசலப்பு ஏற்படுவது வழக்கம் தான். அதன்படி ஜெயலலிதா இறந்த பிறகு துரோகி ஓபிஎஸ்யை, எடப்பாடி பழனிசாமி களை எடுத்து உள்ளார்.

A to Z ஆக அரசியலில் அதிமுக உள்ளது. ஆளும் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் பி டீம் கிடையாது. எங்களை குறை கூற, காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை.

அதிமுக-திமுகவை ஏமாற்றி 10 சீட் வாங்கி கொண்டு காங்கிரஸ் கட்சி ஜெயித்து வருகிறது. திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சீட்டுக்காக காங்கிரஸ் கட்சி நடத்துகிறது, என்று கூறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எதுவென்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார் சொல்லுகின்றனர் இது வெட்கக்கேடான செயல் என தெரிவித்தார்.

ஒளிவு, மறைவு இல்லாத கட்சி அதிமுக. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்ந்தெடுக்கும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்…


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி சிறையில் உள்ள 146 கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்