in

கனிமொழி எம்பியுடனானா சந்திப்புக்கு பிறகு சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவிப்பு


Watch – YouTube Click

நெல்லை,தூத்துக்குடி , கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தெஷணமாறா நாடார் சங்கம் ஆதரவு கனிமொழி எம்பியுடனானா சந்திப்புக்கு பிறகு சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவிப்பு

திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நெல்லை சிந்துப்பூந்துறையில் உள்ள தெஷணமாறா நாடார் சங்க அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் காளிதாசன் நாடார், செயலாளர் ராஜகுமார் நாடார்,துணைச் செயலாளர் ராமநாதன் நாடார் மற்றும் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது கனிமொழி எம்பி சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபாரிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள் என்பதை நன்கு அறிவோம் ஜிஎஸ்டியில் சிறு தவறு நடந்தால் கூட அபராதம் விதிக்கிறார்கள். தொடர்ந்து ஒன்றிய அரசு வியாபாரிகளை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள் வியாபரிகளின் வியாபாரத்தையும் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது ஜிஎஸ்டி பல நாடுகளில் குழப்பம் இல்லாமல் தெளிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது அதேபோல் யாருக்கும் பிரச்சினை இல்லாமல் யாரையும் வருத்தமடையாமல் மாற்றி அமைப்போம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம்

நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை செயல்படுத்தி காட்டுவோம் இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் நாட்டை மற்றும் தமிழகத்தை காக்க வேண்டி தேர்தல் இது தமிழ் மக்களையும் தமிழர் அடையாளத்தையும் காக்க வேண்டிய தேர்தல் நமக்குள் இருக்கும் சிறு சிறு வருத்தங்களை மிகைப்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் வாக்களித்தால் நமக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் இந்துக்களுக்கு நல்லது செய்வதாக பிஜேபி பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பி கொண்டு வருகிறார்கள் ஆனால நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்தது திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் தான் திமுக ஆட்சியில் 1000க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரி பிஜேபி இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும் பிஜேபி தான் திமுக இந்துக்களுக்கு எதிரானவர் போன்று பிஜேபி சித்தரித்து வருகிறது இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள் உங்களுடன் இருப்பவர் யார் உங்களுக்காக போராடுவது யார் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் இந்த தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் புரூட்ஸ{க்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்

ஒன்றியத்தில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து நடைபெறும் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்திலும், தூத்துக்குடியில் உதயசூரியன் சின்னத்துக்கும், கன்னியாகுமரியில் கை சின்னத்திற்கும் ஆதரவு அளிப்பதாக தெஷணமாறா நாடார் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். முன்னதாக பாளையங்கோட்டையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


Watch – YouTube Click

What do you think?

திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்

ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை