in

நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா

நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா

 

நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா வசந்த உற்சவத்துடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா கடந்தவெள்ளிக்கிழமை ஜுலை 31- அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், மாலை வசந்த உற்சவ அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்தில் பவனி வருவதும், தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடராஜர் சிவகாமி சமேதராய் பல்லக்கில் வீதியுலா, வசந்த உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

இந்த விழாவில் கொல்லிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருவதுடன், விழா நாட்களில் மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அறப்பளீஸ்வரர் சுவாமியின் அருளைப் பெறுமாறு, திருக்கோயில் தக்காரும் உதவி ஆணையருமான இரா. இளையராஜா, செயல் அலுவலர் செ. சங்கர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

What do you think?

பொன்மலை ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Australian Online Casino Reviews: Your Essential Guide