in

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா


Watch – YouTube Click

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

 

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சேலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கதக்கது.

ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதி கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி அன்றைய தினம்தேரோட்டம் நடைபெற உள்ளது.

அதை ஒட்டி இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலின் கொடியேற்று விழா நடைபெற்றது. அதை ஒட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மேளதாளங்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர் அதனை தொடர்ந்து கொடியேற்றி வைக்கப்பட்டு உற்சவம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்

அதிமுகவையும் விற்பனை செய்வதில் திமுகவினர் ராஜதந்திரிகள் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் குற்றச்சாட்டு