in

போதையில் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சை பிரிவை சூறையாடிய மர்ம நபர்


Watch – YouTube Click

போதையில் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சை பிரிவை சூறையாடிய மர்ம நபரால் மன்னார்குடியில் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது பகல் இரவு என 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் குறிப்பாக இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் விபத்து உள்ளிட்ட அவசரகால மருத்துவ உதவிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்த இருக்கைகளை தூக்கி வீசி ரகலையில் ஈடுபட்டார் மேலும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் சப்தம் போட்டபடி அங்கும் இங்கும் தாவி குதித்தபடி ஓடிய அவரைக் கண்டு மருத்துவர் செவிலியர் என அனைவரும் அஞ்சி ஒதுங்கினர் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து மன்னார்குடி அரசு மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனையில் ரகலையில் ஈடுபட்ட நபர் மன்னார்குடி வெள்ளக்கார தெருவை சேர்ந்த வடிவேலு என்பது முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் மருத்துவம் பார்க்கும் வீடியோ நேற்றைய தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் மர்மநபர் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்து ரகலையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

பாபநாசம் அருகே கல்லூரி பேருந்தும் லாரியும் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் படுகாயம்