in

பாபநாசம் அருகே கல்லூரி பேருந்தும் லாரியும் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் படுகாயம்


Watch – YouTube Click

பாபநாசம் அருகே தனியார் கல்லூரி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் படுகாயம்

விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நெடுந்தெருவில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பிரஸ்ட் யுனிவர்சிட்டி தனியார் கல்லூரி பேருந்தும் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற கனரக லாரியும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நெடுந்தெருவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது கல்லூரி பேருந்தில் பயணம் செய்த இரண்டு மாணவிகள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்

மேலும் லாரி ஓட்டுனரும் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாபநாசம் அருகே நெடுந்தெரு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

போதையில் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சை பிரிவை சூறையாடிய மர்ம நபர்

மனைவி மீது சந்தேகம் – மது மற்றும் கஞ்சா பழக்கத்தால் விபரீதம்