in

மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது


Watch – YouTube Click

பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் போலீசாருக்கு சக காவல்துறையினர் சார்பில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களுக்கும் இருவரும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வியின் ஏற்பாட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர். கர்ப்பமாக உள்ள பெண் காவலர்களுக்கு உடன் பணிபுரியும் சக காவல் துறையினர் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது‌ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை அரசு பேருந்தில் சுற்றி வரலாம்

எம்பி தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை