in

எங்களை சேர்த்து வையுங்கள் கெஞ்சும் சீரியல் நடிகை தீபா

எங்களை சேர்த்து வையுங்கள் கெஞ்சும் சீரியல் நடிகை தீபா

 

நடிகை தீபா அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர். நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் இவருக்கு ஒரு மகன் உண்டு.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தயாரிப்பு மேலாளர் ஆன கணேஷ் பாபுவை ரகசியமாக திருமணம் செய்தார். சில மாதங்கள் கழித்து அவரே தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை கணேஷ் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே திருமணம் முடிந்தவுடன் தன் வீட்டாருடன் பேசி சம்பந்தம் வாங்கிய பிறகு தீபாவை அழைத்துச் செல்வதாக பாபு கூறிஅவரது வீட்டிலேயே தங்க சொன்னாராம்.

தீபா பல முயற்சிகள் எடுத்தும் கணேஷ் பாபுவை சந்திக்க அவர்களது வீட்டினர் அனுமதிக்கவில்லை. எனவே நீதிமன்றத்தை தற்போது நாடி உள்ளார். இச்சம்பவம் குறித்து தீபா கூறியதாவது நாங்க கல்யாண பண்ணது சின்னத்திரை வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும் திருமணத்திற்கு பிறகு என்னுடன் வாழ மறுத்துவிட்டு அவர் வீட்டிலேயே இருக்கிறார். அவரும் விரும்பி தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார் ஆனால் அவரை அவங்க வீட்டில் கிட்டத்தட்ட ஹவுஸ் arrest வைத்து இருக்கிறார்கள்.

நான் அவரை தேடிச் சென்றபோது அவர் அம்மா என்னை என் ஜாதியை சொல்லி திட்டி அனுப்பிவிட்டார். போலீசுக்கும் நான் சென்றேன் ஆனால் அவரது குடும்பப் பின்னணி காரணமாக போலீசும் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் தான் தற்பொழுது நீதிமன்றத்தை நான் நாடியுள்ளேன் அவர் உடன் நான் இணைந்து வாழ உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்திருக்கின்றேன். நீதிமன்றம் எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என்றார்.

சில நாட்களுக்கு முன்னர் நீச்சல் குளத்தில் தனது மகனுடன் இணைந்து இருக்கும் வீடியோவை வெளியிட்டபோது அவரை பலர் அவரை தவறாக விமர்சனம் செய்த போது கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளிட்டார் என்பது குறிப்பிட தக்கது.

What do you think?

என்னை விமர்சனம் பண்ணுபவர்கள் யாரும்… என் வாழ்க்கை முழுதும் துணையாக நிற்க போவதில்லை

பைனான்ஸியரிடம் உதவி கேட்பது போல் நடித்து, பணம்- நகைகளை கொள்ளை