என்பதில் மறைந்த அப்துல் கலாம் அவர்களின் கனவு என்பதால் அதன் அடிப்படையில் வீத தி லீடர் செயல்படும் என கலாம் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பின் அண்ணாமலை பேட்டி:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 11 வது நினைவு நாளை ஒட்டி அவரது தேசிய நினைவகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது .
இதில் கலந்து கொள்வதற்காக வீத லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தேசிய நினைவகத்தில் கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தார் .
பின்னர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்ன செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை 11 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி இன்று நேரில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். மறைந்த அப்துல் கலாம் அவர்களின் கணவான Ethical Politics என்பதை அடிப்படையாகக் கொண்டு வீத தி லீடர் தொடங்கப்பட்டுள்ளது.
கலாமின் கணவை நினைவாக்கும் ஒரு அரசியல் அமைப்பாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக கலாம் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அவரது குடும்பத்தினரை சந்தித்ததுடன் கலாம் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.
கலாம் தேசிய நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பின் அண்ணாமலை வெளியே வந்திருந்தார் அப்போது பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் அவர்களும் வந்திருந்தார் அப்போது நினைவதற்கு வெளியே காத்திருந்த பாஜகவினர் அண்ணாமலை வரும்போது “பாஜக வாழ்க பாஜக வாழ்க” என கோஷமிட்டனர் இதனை அடுத்து வீத லீடர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் என போட்டி கோஷமிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


