in

பழனி முருகன் கோவில் தைப்பூச காணிக்கை விவரம்


Watch – YouTube Click

பழனி முருகன் கோவில் தைப்பூச காணிக்கை விவரம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது.

இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து இரண்டு நாட்கள் எண்ணப்பட்டது. எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 5 கோடியே 39 இலட்சத்து 72 ஆயிரத்து 368 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 680 கிராமும், வெள்ளி 25102 கிராமும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 854 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் குழு பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆட்டோ ஓட்டுனர்கள், தரைக்கடை வியாபாரிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கி விஜய் ரசிகர்கள்

ஸ்டாலினுடன் கார்கே சந்திப்பு