ஆடி முதல் வெள்ளி தங்ககவச சிறப்பு அலங்காரம்
நாமக்கல் செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தங்ககவச சிறப்பு அலங்காரம்
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் உள்ள அருள்மிகு சுயம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு மூலவர் சுயம்பு மாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுபஞ்ச தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் வழிபாடு செய்தனர்.


