மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவிலான நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று ஒன்றிணைந்து மதுரை சரக டிஐஜியிடம் மனு அளித்தனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார் தொடர்பாக, புதிய அரசு அமைந்த பிறகு இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேட்டால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்பையும் மீட்டெடுக்க வேண்டும் என அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் திரளாக டிஐஜி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நடவடிக்கை மாநகராட்சி நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.200 கோடி முறைகேடு குறித்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த நிதியை மீட்டெடுத்து மாநகராட்சிக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தெரிவித்தார்.


