in

பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்திற்கு செல்லும் வழியில் ஒரு, A/C,BAR ( FL2) அமைக்க வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.

பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்திற்கு செல்லும் வழியில் ஒரு, A/C,BAR ( FL2) அமைக்க வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.

இதை எதிர்த்து அதை சுற்றி குந்துகால், தரவைத்தோப்பு, முகமதியாபுரம் உள்ளிட்ட 6 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து இதை ஆய்வு செய்ய துணைஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று பாம்பன் குந்துகால் செல்லும் வழியில் கட்டப்படும் சம்பந்தப்பட்ட A/C Bar இருக்கும் இடத்தை பார்வையிட்டு மக்களிடம் குறையை கேட்டறிந்தனர்.

மக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த துணை ஆட்சியர், இந்த இடத்தில் மதுக்கடை வருவதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். மேலும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் விண்ணப்பம் அளிக்கவில்லை, விண்ணப்பம் அளித்தாலும் இந்த இடத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி அனுமதி அளிக்க மாட்டோம் என மக்களிடம் கூறினார்.

What do you think?

திண்டிவனம் இலுப்பத்தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா –

தரங்கம்பாடி செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26 ம் ஆண்டு தேர்பவனி விழா