in

15 வழக்கறிஞர்கள் புதிய நீதிபதிகளாக பணி நியமனம்


Watch – YouTube Click

15 வழக்கறிஞர்கள் புதிய நீதிபதிகளாக பணி நியமனம்

 

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற புதிய நீதிபதிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த 9 வழக்கறிஞர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 6 வழக்கறிஞர்கள் என, மொத்தம் 15 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினார்.

புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக 9 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கிராமப்புறங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது மகிழ்ச்சியளிக்கிறது என, முதல்வர் பாராட்டினார். சபாநாயகர் செல்வம், சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டத் துறை சார்புச் செயலர் ஜான்சி உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டு சாலை மறியலால் பரபரப்பு

3 கடைகளை உடைத்து மூன்றே கால் லட்சம் கொள்ளை