in

ஆசிரியர் போட்டித் தேர்வு நெல்லையில் 1274 பேர் போட்டி தேர்வு எழுதினர்


Watch – YouTube Click

ஆசிரியர் போட்டித் தேர்வு நெல்லையில் 1274 பேர் போட்டி தேர்வு எழுதினர்

 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்வு தொடங்கியது நெல்லையில் 1274 பேர் போட்டி தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் வழங்கப்படும் என சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போட்டி தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக இருந்தது அதன்படி கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி போட்டி தேர்வு நடத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் அப்போது வரலாறு காணாத கனமழை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 4ம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு நடைபெற்று வருகிறது அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் டவுன் பாளையங்கோட்டை உள்பட மொத்தம் நான்கு தேர்வு மையங்களில் இந்த போட்டி தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் 1318 பேர் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் இன்று நடைபெற்ற தேர்வில் 44 பேர் கலந்து கொள்ளவில்லை. இதனால் 1274 பேர் தான் தேர்வெழுதினர் ஆங்கிலம் கணிதம் தமிழ் வரலாறு உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளின கீழ் இபபோட்டி தேர்வு நடைபெற்று வருகிறது.

இதை ஒட்டி தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த போட்டித் தேர்வு மூலம் தமிழக முழுவதும் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

சப் இன்ஸ்பெக்டர் கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ வைரல்

முகமூடி அணிந்த மர்ம நபர் ரூ 3 லட்சம் திருடிய சம்பவம்