in

முகமூடி அணிந்த மர்ம நபர் ரூ 3 லட்சம் திருடிய சம்பவம்


Watch – YouTube Click

முகமூடி அணிந்த மர்ம நபர் ரூ 3 லட்சம் திருடிய சம்பவம்

 

தென்காசியில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய வீதியில் மளிகை கடையில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ரூ 3 லட்சம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது – சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள ஒப்பணக்கார விநாயகர் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்துள்ளார். கடையை திறந்து பார்த்த நிலையில் கடையில் பொருட்கள் சிதறி கிடந்த நிலையில் கல்லாபெட்டியில் இருந்த ரூபாய் 3 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினிடம் உடனடியாக புகார் அளித்ததின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டதுடன் கடையின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் நள்ளிரவு நேரத்தில் கடையின் மொட்டை மாடி வழியாக கடைக்குள் ஜன்னலை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளார். முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த அந்த நபர் உடனடியாக சிசிடிவி கேமராவை சேதபடுத்தி விட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து தென்காசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசியில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பிரதான சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஆசிரியர் போட்டித் தேர்வு நெல்லையில் 1274 பேர் போட்டி தேர்வு எழுதினர்

வடக்குப்பட்டி ராமசாமி நகைச்சுவையா? மூடநம்பிக்கையின் வழிகாட்டியா