in

400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமர்வார் மோடி


Watch – YouTube Click

400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமர்வார் மோடி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

அதன்படி, என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தில் பாஜக ஒரு அரசியல் சரித்திரத்தில் அமர்ந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எதற்காக காத்திருந்தோமோ, அது நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் மட்டும் தான் உள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரவுள்ளார். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து39 எம்பிக்கள்  அமர்த்தி அழகு பார்க்கப்படும். இந்த யாத்திரைக்காக கடுமையாக உழைத்துள்ளோம். நம் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

நாம் செய்யவேண்டியது இன்னும் பாக்கி உள்ளது. நம் பணி என்பது இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லோருடைய உழைப்பையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை. இதனை மக்களாகிய நீங்கள் செய்து காட்டவேண்டும் என்றார் அண்ணாமலை.


Watch – YouTube Click

What do you think?

நடிகை படத்தை போட்டு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்

குடித்துவிட்டு பிரபல சீரியல் நடிகை விபத்து… நலமுடன் இருக்கிறேன் ரசிகர்களே கவலை வேண்டாம்