in

சப் இன்ஸ்பெக்டர் கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ வைரல்


Watch – YouTube Click

சப் இன்ஸ்பெக்டர் கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ வைரல்

 

திருவெறும்பூர் காவலர் பயிற்சி பள்ளியில்இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டருக்கு மருத்துவ விடுப்பு தராமல் இழுத்து அடிப்பதால் தனது சாவுக்கு காரணம் ஆகி விடாதீர்கள் என கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது.

இந்த காவலர் பயிற்சி பள்ளியில் சப் இன்ஸ்பெக்டராகவும் சட்ட போதகராகவும் ஜான்கென்னடி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் 1988 ஆம் ஆண்டு காவலராக பணிகள் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தோடு நவல்பட்டு அண்ணா நகர் காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் 370 பேர் பயிற்சி பெற்று நிறைவு அடைந்தது அதன் நிறைவு விழா கடந்த ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது.

இந்த காவலர் பயிற்சி பள்ளியில் டிஎஸ்பி மணவாளன் துணை முதல்வராக உள்ளார். இன்ஸ்பெக்டர் சுகுணா முதன்மை சட்டபோதகரக வேலைப் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஜான்கென்னடிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இவர் இன்னும் ஐந்து மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவர் ஆலோசனைப்படி மறுத்துவ சிகிச்சைக்காக 15 நாட்கள் விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவ விடுப்பைமேலும் ஒரு மாதம் நீடிப்பதற்காக பயிற்சி பள்ளி முதல்வர் மணவாளனிடம் அனுமதி கேட்டதற்கு அவர் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்துவிட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு விடுமுறை நீட்டிப்பு கேட்டு கடிதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். ஆனால் சுகுணா 2 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டதாகவும் மேலும் அப்படி ஜான்கென்னடிக் கிடமிருந்து வரும் விடுப்பு நீட்டிப்பு கடிதத்தை பெற வேண்டாம் என மற்ற அலுவலர்களிடம் அறிவுறுத்தியதாகவும் அதனால் ஜான்கென்னடி விடுப்பு நீட்டிப்பு கடிதத்தை யாரும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த ஜான்கென்னடி விடுப்பு நீட்டிப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அவருக்கு பணிக்கு வரவில்லை என ஆப்சென்ட் போடுவதோடுபணி ஓய்வு பெற உள்ள நிலையில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால் விரக்தி அடைந்த ஜான்கென்னடி கண்ணீர் விட்டு தனக்கு விடுப்பு வழங்குவதில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் நான் என்ன உங்களுக்கு துரோகம் செய்தேன் எதற்காக என்னை பலி வாங்குகிறீர்கள் என உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ ஆறு நிமிடம் 9 நொடி வரை ஓடுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராளானதை தொடர்ந்து.

இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீஸ் உயர் மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஜான்கென்னடியிடமும் இன்ஸ்பெக்டர் சுகுணாவிடமும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உடனடியாக ஜான்கென்னடிக்கு விடுமுறை நீட்டிப்பு வழங்கியதோடு மேலும் இப் பிரச்சனையை மேலும் பெரிதாக்க வேண்டாம் என கூறிய சமரசப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் ஜான்கென்னடி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தமிழகத்தில் பா.ஜ.க வுக்கு ஒரு தொகுதி தான்!

ஆசிரியர் போட்டித் தேர்வு நெல்லையில் 1274 பேர் போட்டி தேர்வு எழுதினர்