in

டீ கடையில் தேநீர் அருந்திய படி விஜய பிரபாகரன் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

விருதுநகர் கல்லூரி சாலையில் நடைபயணத்தின் பொழுது வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார் .

இந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த இரண்டு நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இன்று காலை கல்லூரி சாலையில் உள்ள டீ கடையில் தேநீர் அருந்திய படி விஜய பிரபாகரன் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அந்த வழியாக சென்ற தூய்மை பணியாளர்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேர்த்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் விஜய பிரபாகரன்.

பின்னர் விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி பூங்காவில் தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் உடன் நடை பயிற்சி மேற்கொண்ட விஜய பிரபாகரன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் விஜய் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் பூங்காவில் கராத்தே பயிற்சி மேற்கொண்ட சிறுவர்களுக்கு கராத்தே பயிற்சி குறித்து அறிவுரை வழங்கினார்.

மேலும் விஜய் பிரபாகரன் கல்லூரி சாலையில் சிலம்பம் பயிற்சி மேற்கொண்ட சிறுவர் சிறுமிகளை சிலம்பம் சுற்ற சொல்லி ஊக்குவித்தார்.

மேலும் இந்த நடை பயிற்சியின் பொழுது தேமுதிக மற்றும் அதிமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

சுயேட்சையாக போட்டியில் குதித்த த.வெ.க தொண்டர்

வாக்கு சேகரிப்பின் போது 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து பரிசு அறிவித்த கரூர் பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன்