in

1008 தேங்காய் உடைத்து பிரம்மாண்ட மாலையுடன் வரவேற்பு


Watch – YouTube Click

1008 தேங்காய் உடைத்து பிரம்மாண்ட மாலையுடன் வரவேற்பு

 

தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் தனது வேட்பு மனுவை கடந்த 25ஆம் தேதி தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்காக முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை துவக்கினார்.

புதுச்சேரியில் ஈசானி மூளையான காலாப்பட்டில் இருந்து ரங்கசாமி பிரச்சாரம் செய்வதை சென்டிமென்டாக வைத்துள்ளார்.

அந்த வகையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்காக இன்று இன்று மாலை ஈசானி மூளையில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

1008 தேங்காயை உடைத்து பாஜகவின் சின்னமான தாமரைக்கு அவர் வாக்கு சேகரிப்பை துவக்கினார். அப்பொழுது 1008 கிலோ பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 21 அடி பிரம்மாண்ட மாலை கொண்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கும் வேட்பாளரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து காலாப்பட்டு மற்றும் லாஸ்பேட்டை தொகுதிகளில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்… அப்பொழுது அவர் தாமரைக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மத்திய அமைச்சரவையில் நமச்சிவாயம் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்றும் எதிரணியில் உள்ள காங்கிரசுக்கு வாக்களித்தால் அவரைப் பாராளுமன்றத்தில் ஒரு ஓரமாக தான் உட்கார வைக்கும் என குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

ராவுகாலம் வந்துட்டு சீக்கிரம் வாங்கையா கடுப்பான பாஜக மாவட்ட தலைவர்

சிலிண்டருக்கு மாலை, சைக்கிளில் விறகு மண்வெட்டியுடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல்