in

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு போராட்டம்


Watch – YouTube Click

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு போராட்டம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 200கும்‌ மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமி கொலை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், ஆட்சியாளர்கள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதளம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கடற்கரை சாலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

சுற்றுச்சூழல் அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சி