in

தேர்தல் பத்திரம் மோசடி தொடர்பாக நெல்லையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

தேர்தல் பத்திரம் மோசடி தொடர்பாக நெல்லையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம். வங்கிக்கு பூட்டு போட முயன்றதால் கைது செய்யப்பட்டனர்

தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதனை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணிக்கு நின்ற பாலை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் 13 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாநில வட்டார பொறுப்பில்உள்ளவா்கள் மற்றும் பல்வேறு அணித் தலைவா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நாங்குநேரியில் காரில் கொண்டு வந்த ரூ1 27 கோடி பணம் பறிமுதல்

திண்டிவனம் மயான கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்