in

தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை


Watch – YouTube Click

தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை

 

திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

இந்த நிலையில் நெல்லை என் ஜி ஓ காலனியில் உள்ள ராபர்ட் ப்ருஸின் இல்லத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்லப பிரசாத் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செல்வப் பெருந்தகை கூறியதாவது

இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 25 தொகுதிகள் 50 தொகுதிகள் என வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி மாம்பழத்தை ஒப்பிட்டு ஆட்சியாளர்களின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளார்.

மோடி ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்களே தற்போது அவருக்கு எதிராக பேசிய வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி கன்னியாகுமரி சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கே இருக்கிறார்.

ராகுல் வருகை பிரச்சாரம் கட்சியினரிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் வருகையை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.

எங்களது வேட்பாளர் இறக்குமதி வேட்பாளர் என கூறுவது தவறானது கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் வந்து நடிக்கிறார் அரசியல் செய்கிறார் ரஜினிகாந்த் அவரை எதுவும் கூறுவதில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை நான்கு கோடி பிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு வாரம் கடந்தும் தற்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆணையம் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி கடல் போன்றது அதில் ஒரு சில உட்கட்சி பூசல்கள் அலை போல இருக்கத்தான் செய்யும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் சரியாக செயல்படவில்லை என மொட்டை கடிதாசு அனுப்பியுள்ளனர் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் இல்லை.

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது எதிரிகளே எங்களுக்கு இங்கு இல்லை இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஆன தேர்தல் பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாரதிய ஜனதா கட்சியினர் 2014 ஆம் ஆண்டு கட்சத் தீவு குறித்து பேசியதற்கும் தற்போது பேசுவதற்கும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளது தேர்தலுக்காக அவர்கள் பேசி வருகிறார்கள் தலைவர்கள் பேசும்போது குற்றம் சாட்டும் போது அதில் நேர்மை வேண்டும் அந்த நேர்மை அவர்களிடம் இல்லை. என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

கர்நாடக காவல்துறையினர் சென்ற காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

அண்ணாமலை மீது வழக்கு