in

கோட் பட டீமுக்கு விஜய் போட்ட ஆர்டர்.. மிரண்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

கோட் பட டீமுக்கு விஜய் போட்ட ஆர்டர்.. மிரண்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சைக்கிள் கேப்பில் தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்த விஜய், அரசியல் என்ட்ரியை ரசிகர்களின் மனதில் பதிய வைக்கும் விதத்தில் வெயிட்….டாக தனது கடைசி படத்தை Direct செய்ய போகும் டைரக்டர் யார் என்ற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தளபதி அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கோட் பட டீமுக்கு விஜய் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளாராம் அதாவது மார்ச் இறுதிக்குள் இந்த படத்தை முடித்து விட வேண்டுமாம்.

அதனால் தயாரிப்பாளரும் தன் பங்குக்கு இறங்கி வேலை செய்கிறாராம். இதனால் அர்ச்சனா கல்பாத்தி தற்பொழுது வெளிநாட்டில் டென் போட்டு இருக்கிறார். ரஷ்யா, அஜர்பைஜான் என ஒவ்வொரு இடங்களாக சுறாவளியாக சுற்றி லொகேஷன் பார்த்து வருகிறாராம்.

அஜித்தின் விடாமுயற்சி அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் கோட் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் கோட் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் படத்தை பற்றிய சூப்பர் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

மிஸ் இந்திய போட்டியில் வென்ற அழகி மரணம்

பூங்கா திறப்பு விழா