in

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை நக்கல் பேச்சி


Watch – YouTube Click

அண்ணாமலையால் ஆட்சியை பிடிக்கமுடியாது ஆட்டுக்குட்டியை மட்டும் தான் பிடிக்கமுடியும் ; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை நக்கல்

பேட்டி ; செல்வபெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

நாகை அபிராமி சன்னதி திடலில் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நீர்மோர் பந்தல் திறப்புவிழா இன்று நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பொதுமக்களுக்கு பழவகைகள் மற்றும் மோர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில் ; நரேந்திரமோடி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யும் புரட்டையும் பேசி வந்தார், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியாக பேசினார். தற்போது மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். மோடி எப்படி பேசி குட்டிக்கரணம் அடித்தாலும், இந்திய தேசிய மக்கள் அவரை புறக்கணிப்பார்கள்.

குறிப்பாக இந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு இடமில்லை என்று கூறிய அவர், 10 ஆண்டுகள் ஏமாந்தது போதும் என மோடியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். வடமாநிலங்களில் வேண்டா மோடி என்ற கோஷங்கள் எழுந்து வருவதால் 400 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். எத்தனை தலைவர்களை கைது செய்தாலும் , இந்தியா கூட்டணி தலைவர்கள் அஞ்சமாட்டோம் என்றும், பாஜக தலைவர்களுக்கு மட்டுமே அச்சம் உள்ளது என சாடினார். தமிழக தேர்தல் அதிகாரிகள் உண்மையாக இருக்கிறார்கள் ஆனால் பாசிச சக்திகளான பாஜக தில்லுமுல்லு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் வாக்குரிமை அதிகாரம் மற்றும் சுதந்திரத்தில் பாஜக தலையிடக்கூடாது என்று கூறிய செல்வபெருந்தகை , ஆட்சியை பிடிப்போம் என்று கூறிவரும் அண்ணாமலை ஆட்டுக்குட்டியை வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று விமர்சித்தார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி போலீஸார் நடத்திய போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரியர் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனை