in

மேட்டூரில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பிப்ரவரி 3ஆம் தேதி சாலை மறியல்


Watch – YouTube Click

மேட்டூரில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பிப்ரவரி 3ஆம் தேதி சாலை மறியல்

 

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 3ஆம் தேதி சாலை மறியல் போராட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த வருடம் நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிற் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேரத்தில் 22 செ.மீ அளவு பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து மாவட்ட வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நடத்திய கணக்கெடுப்பில் 15,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளி நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருப்பதாகவும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாத காரணத்தினால் அவை பதராக மாறிவிடும் சூழ்நிலை இருப்பதாகவும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அதனைத் தொடர்ந்து கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் உத்தரவு வரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உரிய முறையில் தெரிவிப்பதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்று மீண்டும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாலடி நெல் பயிர்களை பாதுகாக்கும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சாலை பாதுகாப்பு விழா தலைக்கவசம் அணிந்து வளம் வந்த காவல்துறையினர்

புதுச்சேரி சிறையில் உள்ள 146 கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்