in

ராகுல் காந்தி திருநெல்வேலி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


Watch – YouTube Click

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ஆம் தேதி மாலை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலியின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு வருகை தருவது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் ராகுல் காந்தி வரும் தினத்தன்று அல்லது அதற்கு முன்னரோ பின்னரோ அவரது பயணத்திட்ட பிரச்சார திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்

வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் நூறு நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானதா என கேட்டதற்கு, இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திற்கு தான் புகார் அளிக்க வேண்டும் என பதிலளித்த தனக்கு தென்னரசு , திமுகவின் வழக்கறிஞர் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கென பிரத்தியேக வார் ரூம்  சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்


Watch – YouTube Click

What do you think?

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா பறை இசைத்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார்

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி