in

கோவில் தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்து எடுக்கும் பணி


Watch – YouTube Click

கோவில் தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்து எடுக்கும் பணி

 

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகள் உண்டியலில் பெற்ற தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் பணம், சில்லறை காசு தங்கம் மற்றும் வெள்ளி வெளிநாட்டு காசு மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்த உண்டியல் காணிக்கை நிரம்பியவுடன் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உண்டியலில் எண்ணிக்கை நடைபெறும் . அப்படி உண்டியலில் எண்ணிக்கை நடைபெறும் போது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கோவில் லாக்கரில் வைத்து பாதுகாத்து வருவார்கள்.

அப்படி 16 ஆண்டுகள் லாக்கரில் வைக்கப்பட்ட தங்கத்தை சுமார் 22 கிலோவுக்கு மேல் உள்ள தங்கத்தை சுத்த தங்கமாக பிடித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் ஓய்வு பெற்ற நீதிபதி மாலா தலைமையில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் உறுப்பினர் முன்னிலையில் கடந்த 16 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 202 கிலோ தங்கம் அதில் இருக்கும் கற்கள் அறக்கு, அழுக்கு நீக்கி சுத்த தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியானது 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணியானது இன்னும் 15 நாட்களுக்கு மேல் நடைபெறும் எனவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்தப் பணியை வீடியோ பதிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலையில் தங்கத்தை அனுப்பி கட்டிகளாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மாணவிகளுக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் அம்பலமானது பெண் ஆசிரியரின் லீலைகள்

அம்பானி மகன் திருமண நிகழ்ச்சியில் திருட்டு திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது