in

செஞ்சியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவமனை ஊழியர் பலி


Watch – YouTube Click

செஞ்சியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவமனை ஊழியர் பலி

 

செஞ்சி நான்கு முனை கூட்டு சாலையில் அரசு பேருந்து மோதிய விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் பலி

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த இருசன் மகன் கார்த்திகேயன் வயது 34 என்பவர் வளத்தி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தொகுப்பு ஊதியத்தில் மருத்துவமனை ஊழியராக பணியாற்றி வருகிறார்,

இவர் விழுப்புரத்தில் இருந்து வளத்தி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தவர் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் சாலையில் இறங்கி அங்கிருந்து வளத்தி வழியாக வேலூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக காலையில் ஓரம் நின்று கொண்டிருந்தவரை முன் பேருந்து உரசியதில் கால் இடறி கீழே விழுந்தார்.

அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடி வி கேமராவில் பகுதியில் பதிவான காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக செஞ்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து ஏறி உயிரிழந்த கார்த்திகேயனுக்கு தீபா என்ற மனைவியும் பிரனேஷ் என்ற 6 வயது மகனும், மேகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளது.

விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தில் பணிக்கு சென்ற கார்த்திகேயன் இறந்த தகவலை அறிந்து அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.

தொடர்ந்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணனை மேற்கொண்டு வருகின்றனர்..


Watch – YouTube Click

What do you think?

வாக்கு எண்ணும் இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

திருவிடைமதூர் கிராமத்திற்கு வந்த முதலையால் பரபரப்பு