in

புதிய அமைச்சரை சட்டப்பேரவை அலுவலக அறையில், ரங்கசாமி அமர வைத்தார்


Watch – YouTube Click

புதிய அமைச்சரை சட்டப்பேரவை அலுவலக அறையில், ரங்கசாமி அமர வைத்தார்

 

புதிய அமைச்சரை சட்டப்பேரவை அலுவலக அறையில், ரங்கசாமி அமர வைத்தார்; காரைக்காலுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து, காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்- அமைச்சர் திருமுருகன் பேட்டி

அமைச்சராக பதவி ஏற்று கொண்ட திருமுருகனை சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள அறையில் முதல்வர்‌ ரங்கசாமி அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு தன்னுடைய தனி செயலாளர் நியமனத் தொடர்பான கோப்பில்‌ அமைச்சர் திருமுருகன் கையெழுத்திட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திருமுருகன், என் மீது நம்பிக்கை வைத்து அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரைக்கால் மாவட்டம் பின்தங்கி மாவட்டமாக இருக்கிறது. குறிப்பாக மருத்துவம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றில் பின்தங்கி உள்ளது.

இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும், காரைக்கால் வளர்ச்சி அடையவில்லை என்ற குற்றசாட்டும் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு காரைக்காலுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்.

காரைக்காலில் என்னென்ன இடத்தில் எந்தெந்த பிரச்சனை இருக்கு என்று எனக்கு நன்றாக தெரியும். அதையும் கண்டுபிடித்து அதை சரி செய்து திட்டங்கள் சரியான முறையில் சென்றடைவதற்கான வழிமுறைகளில் இறங்குவேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

புதிய அமைச்சராக காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். என். திருமுருகன் பதவியேற்பு

23 நாய் இனங்களுக்கு தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு