in

ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி பணமோசடி

ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி பணமோசடி

ரஜினியுடன் நடிக்க வைக்கவில்லை இளம்பெண் புகார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி பெங்களூருவில் மோசடி நடந்துள்ளது. ஒரு கும்பல் ரஜினிகாந்தின் 171 படத்தில் நடிக்க புது முகதேர்வு நடப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்தனர்.

ரஜினி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நிறைய பேர் தேர்வுக்கு சென்றனர். அவர்களிடம் கேஸ்டிங் டைரக்டர் என்று சிலர் தங்களை அறிமுகம் செய்து, ரஜினியுடன் அடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றனர்.

இதில் ரஜினியுடன் நடிக்கும் ஆசையில் ரூபாய் 3.9 லட்சத்தை கொடுத்து ஏமாந்த மிருதுளா என்ற பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் யார் அவர்கள் என்று விசாரிக்காமல் உடனே நான் பணத்தை கொடுத்து விட்டேன் அவர்களுக்கு தலைவராக சுரேஷ்குமார் என்பவர் இருந்தார் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

What do you think?

கமல்ஹாசனின் கல்கி 2898 AD’ ரிலீஸ்சுக்கு தடா

பழனி கோயிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்