in

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்


Watch – YouTube Click

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மாணவி இன்பா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அவரை நேரடியாக அழைத்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியதுடன் தேநீர் விருந்து அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி இன்பா. இவர் யூ.பி.எஸ்.சி தேர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் செங்கோட்டை அரசு நூலகத்தில் படித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த முயற்சிகளை அடிப்படையில் தற்போது ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்து தென்காசி மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அவரை சந்தித்து பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சாதாரண குடும்பத்தில் இருந்து யூபிஎஸ்சி தேர்வை எழுதி வெற்றி பெற்ற இன்பாவை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாணவி இன்பாவிற்கு பூங்கொத்து வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததுடன் அவருக்கு தேனீர் விருந்தும் அளித்துள்ளார். மேலும் இதேபோன்று கிராமப்புற மாணவர்களும் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி தேர்வுகளை வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தூய்மை பணியாளர்ளுக்கு உணவு அளித்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் சாலை மறியல்