in

காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார் அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார்


Watch – YouTube Click

காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார்..அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மிக முக்கியமான தேர்தல் இது..சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஒரு உள்துறை அமைச்சருக்கும் இவ்வளவு துறைகள் ஒதுக்கியதில்லை.

சிபிஐ,அமலாக்கத்துறையை தவறாக கையாண்டு தங்களுக்கு எதிராக பேசுபவர்களை பழிவாங்குகிறார் அமீத் ஷா…இதனால் ஒவ்வொரு மாநிலமாக சென்று ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறோம்..மோடி கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என கூறினார்..

மோடி எங்கு சென்றாலும் காங்கிரசை குறை கூறுகிறார்..
1989ம் ஆண்டுக்கு பிறகு எந்த காந்தி குடும்பம் நாட்டை ஆண்டது..? என கேட்ட கார்கே,காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார்.அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார் என்றார்.ஜனநாயகத்தை காக்க கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்..தமிழகத்தை பொறுத்த வரை மகிழ்ச்சி..தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் எனவும்
கார்கே தெரிவித்தார்.

தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
மோடியை போல எண்ணிக்கையை கூற விரும்பவில்லை…
கணிகமான இடங்களை பெறுவோம் என கேள்வி ஒன்றிற்கு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஒரு நாடு..ஒரு தேர்தல் எப்படி நடக்கும்..சாத்தியமில்லை என்றும்
புதுச்சேரி…அமேதி தொகுதியில் ராகுல் போட்டியா…?
அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லையே..?என்ற கேள்விக்கு தற்போது வரை
மூன்றாவது கட்டம் மட்டும் தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்..பிறகு தெரியும் என கார்க் பதிலளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா